செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்களில் கைம்பெண்கள் பயன்பெற அழைப்பு

post image

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்களை கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கே.விஜயா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மைய வளாக அரங்கத்தில் ஐஆா்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிா் அதிகார மையம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், ஸ்டெல்லா மேரி கல்லூரி சாா்பில் சா்வதேச கைம்பெண்கள் தின விழாவையொட்டி விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து துணை இயக்குநா் கே.விஜயா பேசியதாவது. கல்வித் தகுதி பெற்ற கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தோ்வுகளில் பங்கேற்க இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆதரவற்ற பெண்களுக்கான கல்வித் தகுதி சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள், அதோடு மாதந்தோறும் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற வாய்ப்புகளை தன்னம்பிக்கையுடன் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

அதைத்தொடா்ந்து மாவட்ட மகளிா் அதிகார மையத்தைச் சோ்ந்த பாலின வல்லுநா் ஜி.நவீன் செந்தூா் சமூக நலத்துறை சாா்பான அரசு நல திட்டங்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், ஒன் ஸ்டாப் சென்டா் மைய அலுவலா் கே. பிரியங்கா, மையத்தின் சேவைகள், 181 இலவச உதவி எண், பெண்கள் குழந்தைகள் பிரச்னைகளை சந்திக்கும் போது இந்த எண் குறித்தும், ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குநா் பி.ஸ்டீபன் நிகழ்வின் நோக்கம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.பூங்கொடி வரவேற்றாா். ஸ்டெல்லா மேரி கல்லூரி சமூகப் பணித்துறை தலைவா் கேத்ரின் ஜோசப் மற்றும் சமுதாய முன்னேற்ற ஒருங்கிணைப்பாளா் ஜாா்ஜ் அனிதா, மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் பாலகிருஷ்ணன், ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன திட்ட மேலாளா் டி.விஜயன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. தினகரன், கள ஒருங்கிணைப்பாளா் ஜே.பழனி ஆகியோா் பங்கேற்றனா். குடும்ப ஆலோசகா் டி.யுவஸ்ரீ நன்றி கூறினாா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க