செய்திகள் :

தனுஷ்கோடியில் இருந்து கச்சத்தீவு வரை ரசிக்க ஓர் சூப்பர் ஸ்பாட்! எங்கே இருக்கிறது தெரியுமா?

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி ஒரு காலத்தில் தொழில் செய்யும் நகரமாக இருந்தது. அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அந்த நகரமே கடலில் மூழ்கியது.

அதன்பின்னர் அங்கு எஞ்சி இருக்கும் பழைய தேவாலயம், ரயில் நிலையம், தபால் நிலையம் போன்ற இடங்களை சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து வருகின்றனர்.

கடலின் அழகையும், மண்ணில் புதைந்து கிடக்கும் கட்டிடங்களையும் ரசிக்க ஆயிரக்கணக்கானோர் தனுஷ்கோடிக்கு வருகின்றனர். அழிந்த நகரம் ஒரு திகிலூட்டும் சுற்றுலா தலமாக மாறி பலரையும் ஈர்த்து வருகிறது.

இந்த தனுஷ்கோடியில் மற்றொரு சிறப்பான இடமும் உள்ளது. அதுதான் அங்கு இருக்கும் கலங்கரை விளக்கம். மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியான பாக் ஜலசந்தி பரப்பையும் கண்டு ரசிக்க முடியும்.

அதேபோல அங்கிருந்து சில மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவு தென்படும். சிறிய அளவில் தெரியும் கச்சத்தீவு அழகை கண்டு ரசிக்கலாம்.

இந்த கலங்கரை விளக்கத்தில் நீங்கள் அனுபவிக்கும் காட்சியை, நேரத்தை உங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இரண்டு பக்கங்களுலும் கடல் சூழ நடுவில் இருக்கும் சாலையில் வாகனங்கள் செல்வதும், கடலில் படகுகள் மிதப்பதும் என பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எனவே தனுஷ்கோடியில் இருக்கும் இந்த இடத்தை மிஸ் செய்து விடாதீர்கள்!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Travel Contest: "பாக்க சின்னதா இருக்கும்; ஆனா ஆளயே கொன்றும்" - பரம்பிக்குளம் சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: இது உலகின் சொர்க்கம்ப்பா! Switzerland-ஐ சுற்றிப் பார்க்க எவ்வளவு செலவாகும்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வால்பாறை தேயிலை தோட்டம் கொடுத்த நெகிழ்ச்சியான அனுபவம்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாம்பன் பாலம், தனுஷ்கோடி மட்டுமல்ல... ராமேஸ்வரத்தில் பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று ராமநாதபுரம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு உள் மாநிலங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அங்கு இருக்கும் ... மேலும் பார்க்க

Travel Contest: கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? - ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மலைமீது எப்படித்தான் செதுக்கினார்களோ! - குடுமியான்மலையில் ஒரு அற்புத அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க