செய்திகள் :

"தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்..." - வெற்றி மாறன்

post image

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது.

Vetrimaaran - Dhanush
Vetrimaaran - Dhanush

அதற்காக வெற்றி மாறன் மேற்கொண்ட ப்ரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. அப்படமும் 'வடசென்னை' படத்தின் உலகத்திற்குள் வருவதால் தனுஷ் அதற்கான காப்புரிமைக்கு பணம் கேட்டதாக பேசப்பட்டது. அதை மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வெற்றி மாறன்.

அது குறித்து வெற்றிமாறன் பேசும்போது, "தனுஷ்தான் 'வடசென்னை' படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தின் இரண்டாம் பாகமோ அல்லது ஸ்பின்-ஆஃபோ எடுத்தால், அதன் காப்புரிமையைப் பெற வேண்டும்.

ஒருவர் காப்புரிமைக்காகப் பணம் கேட்பது சரியானதுதான். அதை எதிர்மறையான விஷயமாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் சிம்புவைச் சந்தித்த மறுநாளே தனுஷிடம் பேசினேன்.

அவரிடம், 'இந்தப் படத்தை 'வடசென்னை' கதாபாத்திரங்களுடன் இணைத்தும் எடுக்க முடியும், தனியாகவும் இதைப் படமாக உருவாக்க முடியும்.

தனுஷ் - வெற்றி மாறன்
தனுஷ் - வெற்றி மாறன்

'வடசென்னை' படத்தின் காப்புரிமை உங்களிடம்தான் இருக்கிறது,' என்று கூறினேன். அதற்கு அவர், 'உங்களுடைய எண்ணத்திற்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்யுங்கள். நான் என் குழுவிடம் பேசி காப்புரிமையைத் தந்துவிடுகிறேன். அதற்கு எனக்கு பணம் எதுவும் வேண்டாம்,' என்று கூறிவிட்டார்.

எனக்கும் தனுஷுக்குமான உறவு ஒரு சம்பவத்தால் எளிதில் உடையக்கூடியது அல்ல. யூட்யூபில் என்னைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய எண்ணங்களுக்கு அவர் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

சமீபத்தில் எனக்கு ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்குவதற்கு தனுஷ் எனக்கு உதவி செய்தார். தனுஷ் எப்போதும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்.

வெற்றிமாறன் - தனுஷ்
வெற்றிமாறன் - தனுஷ்

சிம்புவுடன் நான் இணையும் செய்தியைச் சொன்னவுடன், தனுஷ், 'இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். சிம்புவுக்கு உங்களுடன் இணைந்து படம் செய்வதும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.' என்று கூறினார்." என தெரிவித்தார்.

Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' - இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா

10 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கவிருக்கும் திரைப்படம் 'கில்லர்'.இந்தப் படத்தில் 'அயோத்தி' பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த வாரம் இந்த படம் தொடர்பான அதிகாரப்ப... மேலும் பார்க்க

"சின்னப் பையனா இருந்தவருக்கு கல்யாணமானு... வயச நம்பமாட்டேங்குறாங்க" - பகிர்கிறார் `பசங்க’ ஶ்ரீராம்

'பசங்க' திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்களை என்றும் மறக்க முடியாது. சிறுவயதிலேயே அவரவரின் கதாபாத்திரங்களுக்கு முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தனர். அவர்களுள் ஜீவா என்ற கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க

Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்கின்

அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'டிராகன்'. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். 'டிராகன... மேலும் பார்க்க

Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்

கடந்த இரண்டு நாட்களாக வெற்றிமாறன் - தனுஷ் - சிலம்பரசனின் 'வட சென்னை' என்.ஓ.சி. விவகாரம்தான் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு வெற்றிமாறன் முடிவுக்கு வந்துவிட்டவே, மீ... மேலும் பார்க்க