செய்திகள் :

தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்: தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

post image

எண்ம (டிஜிட்டல்) உலகில் தன்மறைப்பு நிலையை (பிரைவஸி) மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவரும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தில்லியில் என்ஹெச்ஆர்சி சார்பில் "டிஜிட்டல் காலத்தில் தன்மறைப்பு நிலை மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல்' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் என்ஹெச்ஆர்சி தலைவர் வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், "டிஜிட்டல் உலகில் தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம். அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தன்மறைப்பு நிலை பாதுகாப்புக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் பயன்பாட்டில் குறைபாடுகள் இருக்கக் கூடாது. புதுமையான கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, ஒருவரின் தன்மறைப்பு நிலை ஆகியவற்றை சமநிலையுடன் கையாளும் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு டிஜிட்டல் உரிமைகள், நிறுவனங்கள் பொறுப்பேற்பது ஆகியவை குறித்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விவாதங்களை ஊக்குவிப்பதில் என்ஹெச்ஆர்சி உறுதியாக உள்ளது' என்றார்.

என்ஹெச்ஆர்சி உறுப்பினரும் முன்னாள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான வித்யுத் ரஞ்சன் சாரங்கி பேசுகையில், "டிஜிட்டல் பயன்பாடு குறித்துப் பொதுமக்கள் பலருக்குத் தெரியவில்லை. அவர்கள் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்த பிறரைச் சார்ந்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே சாமானியர்கள் டிஜிட்டல் முறையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை அதிகரிக்க, அந்தத் தொழில்நுட்ப நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்' என்றார்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க