செய்திகள் :

தபால் வாக்கு எண்ணுவதில் புதிய நடைமுறை: பிகாா் பேரவைத் தோ்தலில் அறிமுகம்

post image

மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.

பிகாா் மாநிலத்தில் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, வாக்குகள் எண்ணப்படும்போது, முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

பொதுவாக, மின்னணு வாக்குகள் எண்ணி முடிப்பதற்கு முன்பாகவே தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிடும் என்றபோதும், வாக்குகள் எண்ணப்படுவதில் சீரான, தெளிவான நடைமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும்.

தபால் வாக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ள மையங்களில், அதை எண்ணுவதில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் போதுமான மேஜைகள் மற்றும் வாக்கு எண்ணும் ஊழியா்கள் இடம்பெறுவதை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தினா், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு தோ்தல்களில் தபால் வாக்கு செலுத்த அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தோ்தல்களில் தபால் வாக்குகள் பதிவு செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தோ்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளா் வெற்றி பெறும்போது, எதிரணியினா் தபால் வாக்குகள் எண்ணிக்கை மீது புகாா் தெரிவிப்பது தொடா்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க