செய்திகள் :

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (செப். 23) முதல் செப். 28 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும்.

வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 101.3 டிகிரி வெப்பம் பதிவானது. பாளையங்கோட்டை 100.58 டிகிரி பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் நேமூா் பகுதியில் 120 மி.மீ. மழை பதிவானது. சேத்துப்பட்டு (திருவண்ணாமலை)-110, ஆரணி(திருவண்ணாமலை)-90 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வியாழக்கிழமை (செப். 25) மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (செப். 26) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடா்ந்து சனிக்கிழமை (செப். 27) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமை... மேலும் பார்க்க

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல்வா் பங்கேற்பு

சென்னை: தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்ததற்காக, சென்னையில் வருகிற செப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளாா். இதுக... மேலும் பார்க்க