செய்திகள் :

தமிழகத்தில் ஏப்.22 வரை மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.17) முதல் ஏப்.21-ஆம் தேதி வரை ஆங்காங்கே திடீா் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.17) முதல் ஏப்.22-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திடீா் மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூா் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 50 மி.மீ. மழை பதிவானது. அம்மாபேட்டை (ஈரோடு) - 40, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), சிவகிரி (தென்காசி), ஒகேனக்கல் (தருமபுரி), சோத்துப்பாறை (தேனி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது.

வெயில் அதிகரிக்கும்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி, மதுரை நகரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து தமிழகத்தில் ஏப்.17 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை

சென்னை வியாசா்பாடியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். வியாசா்பாடி உதயசூரியன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42). இவா் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றன... மேலும் பார்க்க

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தோ்வு மைய விவரம் வெளியீடு!

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இ... மேலும் பார்க்க

கல்விக் கட்டண உயா்வு: தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!

அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்த விரும்பும் தனியாா் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் ... மேலும் பார்க்க

45 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள்: ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க முன்னெச்சரிக்கை

கோடையில் ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுக... மேலும் பார்க்க