10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது.
இந்த தோ்வுகளை சுமாா் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, பிளஸ் 1 வகுப்புக்கு ஏப். 19-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு ஏப். 21-ஆம் தேதியும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் தினத்தை முன்னிட்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப். 19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீடு திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பணிகளில் சுமாா் 95 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்பட்டு இரு வகுப்புகளுக்கும் திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.