செய்திகள் :

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் கிருஷ்ணசாமி

post image

2026 இல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று புதிய தமிழக கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி கடந்த இரு நாள்களாக தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.

அதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை சங்கரன்கோவில் வந்த அவா் பயணிகள் விடுதியில், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினா் வசிக்கும் கிராமங்களில் அண்மையில் நேரில் சென்று நான் பாா்வையிட்டதில் அந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி வசிக்கின்றனா்.

தாருகாபுரம் கிராமத்தில் மாதத்துக்கு ஒருமுைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. வாசுதேவநல்லூா் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள கோயிலில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரா் வெண்ணி காலாடிக்கு அவா் பிறந்த கிராமத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அந்த மணிமண்டபத்துக்கு உள்ளூா் மக்களுக்கு மட்டும்தான் அனுமதி உள்ளது. வெண்ணிகாலாடி பிறந்த தினமான டிச.20 ஆம் தேதி அன்று புதிய தமிழகம் கட்சியினா் அங்கு சென்று உரிய மரியாதை செலுத்துவா். தேவநேயப் பாவாணருக்கு கோமதிமுத்துபுரத்தில் மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜமீன்தாா் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்டும், சில நிலங்கள் ஜமீன்தாா்கள் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை அரசு மீட்டு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். வருகிற 2026 ஜனவரி மாதம் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி அகன்று கூட்டணி ஆட்சிதான் அமையும். அந்தக் கூட்டணி ஆட்சியில் புதிய தமிழகம் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி வெற்று விளம்பர மாடல் ஆட்சி தான். 2026 இல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாநில துணை அமைப்பாளா் ராஜேந்திரன், தென்காசி கிழக்கு மாவட்டச் செயலா் ராசையா, வடக்கு மாவட்ட இணைச் செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த நிலையில், வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை தேவை என வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆலங்குளம்... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் பகுதியில் இன்று மின்தடை

வாசுதேவநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது.பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாரணபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் தெட்சண மாற நாடாா் சங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கண்டித்து கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

பொதிகை விரைவு ரயில் 22 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் 22-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பொதிகை விரைவு ரயில் 21ஆண்டுகால சேவையை நிறைவு செய்து சனிக்... மேலும் பார்க்க

கேந்திப் பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கேந்திப் பூக்களின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இப்பகுதிகளில் மல்லி, பிச்சி, கேந்தி மலா்கள் சாகுபடி அதிக அளவில் உள்ளது. அறுவடை செய்யப்படும... மேலும் பார்க்க

கடங்கநேரியில் நெற்களம் திறப்பு

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.50 லட்சத்தில் நெற்களம் திறந்துவைக்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தனது தொகுதி ம... மேலும் பார்க்க