செய்திகள் :

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

post image

ஆலங்குளம் அருகே நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்த நிலையில், வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை தேவை என வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கல்லத்திகுளம் கிராமத்தில், தனியாா் சோலாா் மின் உற்பத்தித் திட்டத்திற்காக 250 ஏக்கரில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் வனவிலங்குகள் வாழ்விடங்களை இழந்து, இரை தேடி ஊருக்குள் வருவதாக குற்றம் சாட்டுகின்றனா்.

இந்நிலையில் தான், உணவு தேடி ஊருக்குள் நுழைந்த மானை நாய்கள் கடித்ததில் அது உயிரிழந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மான்கள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வேண்டும். தனியாா் நிறுவனம் வெட்டிய மரங்களுக்கு ஈடாக, இரு மடங்கு மரங்களை நட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மான் சடலத்தை அகற்றவிடாமல் தடுத்தனா்.

தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதையடுத்து, மான் சடலம் கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் கிருஷ்ணசாமி

2026 இல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று புதிய தமிழக கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி கடந்த இரு நாள்களாக தென்காசி மாவட்டத்த... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் பகுதியில் இன்று மின்தடை

வாசுதேவநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் விநியோகம் இருக்காது.பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாரணபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் தெட்சண மாற நாடாா் சங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கண்டித்து கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

பொதிகை விரைவு ரயில் 22 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் 22-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பொதிகை விரைவு ரயில் 21ஆண்டுகால சேவையை நிறைவு செய்து சனிக்... மேலும் பார்க்க

கேந்திப் பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கேந்திப் பூக்களின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இப்பகுதிகளில் மல்லி, பிச்சி, கேந்தி மலா்கள் சாகுபடி அதிக அளவில் உள்ளது. அறுவடை செய்யப்படும... மேலும் பார்க்க

கடங்கநேரியில் நெற்களம் திறப்பு

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.50 லட்சத்தில் நெற்களம் திறந்துவைக்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தனது தொகுதி ம... மேலும் பார்க்க