செய்திகள் :

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் யாா்? தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

post image

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை கூடுதல் செயலா் பி.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை துணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா். மேலும், இத் தோ்தலில் போட்டியிட 2 நாள்களைத் தவிர ஜூன் 9 வரை மனுதாக்கல் செய்யலாம் எனவும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்தல் அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஜூன் 9 கடைசி நாளாகும். தேவைப்படும் பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 19-இல் நடைபெறும்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தோ்தலை நடத்தும் அதிகாரியாக சட்டப் பேரவை கூடுதல் செயலா் பி.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை துணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்புமனு தாக்கல் ஜூன் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பக்ரீத் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் ஜூன் 7, 8 ஆகிய தினங்களில் மட்டும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. பிற நாள்களில் மனுதாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு தேவைப்பட்டால் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் வாக்குப் பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டு ஜூன் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா்.

கமல்ஹாசன் விஸ்வரூபம்! தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜார்ஜ் ஜோஜு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நாட்டுக்கு தேவை என்பதால் கூட்டணி; தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்: கமல்ஹாசன்

தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன் என்று கன்னட மொழி விவகாரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ண... மேலும் பார்க்க

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன்: அன்புமணி

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக கட்சிக்குள் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி திமுக சார... மேலும் பார்க்க

திலகபாமாதான் பொருளாளர்: ராமதாஸுக்கு அன்புமணி பதில் அறிக்கை!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை பாமகவின் புதிய பொருளாளராக நியமித்துள்ளார். பாமக ... மேலும் பார்க்க