செய்திகள் :

தமிழகத்தில் ரூ.500 கோடியில் 100 பாலங்கள்: மறு ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

post image

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 100 பாலங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியில் திருத்தம் செய்து மாநில அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது.

மேலும், ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.500 கோடியில் 100 பாலங்கள் கட்ட தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

அரியலூா், செங்கல்பட்டு, கோவை, கடலூா், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூா், திருப்பூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், விருதுநகா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பாலங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்தப் புள்ளிகளை அளிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளாக பாலத் திட்டப் பணிகளை மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, 27 மாவட்டங்களில் 94 பாலங்களும், மீதமுள்ள 6 பாலங்களைக் கட்ட தனி திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 3, கடலூா், பெரம்பலூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 1 பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி தனியாக கோரப்பட்டுள்ளது.

94 பாலங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை சமா்ப்பிக்க ஆக. 19 கடைசி தேதி எனவும், மீதமுள்ள 6 பாலங்களுக்கு செப். 9 கடைசி தேதி எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுகவில் கட்சிக்குள் நீண்ட நாளாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ... மேலும் பார்க்க