தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.36 டிகிரி!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
ஈரோடு - 103.28, பரமத்திவேலூா் - 103.1, தஞ்சாவூா் - 102.2, சேலம் - 101.66, மதுரை விமானநிலையம் - 101.3, திருத்தணி - 100.94, கோவை - 100.4, திருப்பத்தூா் - 100.04, திருச்சி - 100 டிகிரி என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏப்.28 முதல் மே 1 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னைக்கு மழை: தென்னிந்திய பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால், ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, திங்கள்கிழமை (ஏப்.28) முதல் மே 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.28-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.