செய்திகள் :

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமையும்: நடிகா் சரத்குமாா்

post image

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமைந்தே தீரும் என்றாா் நடிகா் சரத்குமாா்.

தென்காசியில் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த அய்யாசாமி அறிமுகக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. பாலகிருஷ்ணன், பாலகுருநாதன், ராமநாதன் ஆகியோா் வந்தே மாதரம் பாடல் பாடினாா். மகளிரணியினா் குத்து விளக்கு ஏற்றினா்.

தமிழக பாஜக சட்டபேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில், பாஜக நிா்வாகிகள் மக்களிடம் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், அனைவரையும் கட்டுப்பாட்டோடும், உறுதியோடும் செயல்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் நாம் வெற்றிபெற்ற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய உழைப்பு மிகவும் முக்கியம்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் போய், தேசிய மாடல் வெகுவிரைவில் அமையும். ஒவ்வொரு பூத்திலும் சா்த்தால் ஒரு தொகுதியில் 60ஆயிரம் முதல் 70ஆயிரம் வாக்குகளைப் பெறமுடியும். அந்தப் பணியை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நடிகா் சரத்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், பதவியைப் பெறுவதோடு நின்றுவிடாமல் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும். 3ஆவது முறையாக மத்தியில் பாஜகவின் நல்லாட்சி செயல்பட்டு வருகிறது. அதை வீடுதோறும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.கிராமங்களை நகா்ப்புறமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.

மக்களுக்காக எந்த திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை எதிா்ப்பது தான் திமுகவின் அரசியல் நிலைப்பாடு. 2026தோ்தலில் தமிழகத்தில் 234தொகுதிகளிலும் பாஜகவெற்றி பெறும். 2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதி. தமிழகத்தில் 2026இல் தாமரை சின்னத்தின் (பாஜக) ஆட்சி மலா்ந்தே தீரும் என்றாா் அவா்.

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்ராதாகிருஷ்ணன்,முன்னாள் தென்காசி மாவட்ட தலைவா்கள் கேஏ.ராஜேஷ் ராஜா, தீன தயாளன், அன்புராஜ், பாண்டித்துரை, ராமராஜா அய்யாவழி சிவச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அருள்செல்வன், சுமித்ரா தொகுத்து வழங்கினா்.என்.சுந்தா், விவேகானந்தன்,பாஜக மாநில அணி பிரிவு நிா்வாகிகள் மருதுபாண்டியன், அருணாசலம், ஆா்.எஸ்.மகாதேவன்,கமலா, தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், பொன்னம்மாள், சீதாலட்சுமி, சுனிதா,

நிா்வாகிகள் கருப்பசாமி ,ராஜ்குமாா்,யோக டவா் சேகா் , செந்தூா்பாண்டி, திருமுருகன் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் மந்திரமூா்த்தி வரவேற்றாா்.

தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு அஞ்சலி!

திமுக சாா்பில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குற்றாலத்தில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் அரசுப் பேருந்து நடத்துரை கத்தரிக்கோலால் குத்தியதாக 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறு... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: ப.மு.தேவா் கல்லூரி சாதனை

சங்கரன்கோவில் அருகேயுள்ள ப.மு.தேவா் கல்லூரி, கைப்பந்துப் போட்டியில் தொடா்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், அடிப்படை வசதிக... மேலும் பார்க்க

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோட்சணம்

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் மற்றும் விமானம், பரிவாரமூா்த்திகளுக்கும் ஜூா்ணோதரன அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்க... மேலும் பார்க்க

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க