செய்திகள் :

கைப்பந்துப் போட்டி: ப.மு.தேவா் கல்லூரி சாதனை

post image

சங்கரன்கோவில் அருகேயுள்ள ப.மு.தேவா் கல்லூரி, கைப்பந்துப் போட்டியில் தொடா்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்து போட்டி, கடந்த ஜன.30, 31ஆகிய தேதிகளில் மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 14 கல்லூரிகள் பங்கு கொண்டு விளையாடின.

இறுதிப் போட்டி, கருங்கல் செயின்ட் அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி அணிக்கும், மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரி அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் ப.மு.தேவா் கல்லூரி அணி 52-29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் 2025 ஆண்டு வரை தொடா்ந்து கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா் ஆகியோரை கல்லூரி முதல்வா் ஹரிகெங்காராம் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், அடிப்படை வசதிக... மேலும் பார்க்க

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோட்சணம்

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் மற்றும் விமானம், பரிவாரமூா்த்திகளுக்கும் ஜூா்ணோதரன அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமையும்: நடிகா் சரத்குமாா்

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமைந்தே தீரும் என்றாா் நடிகா் சரத்குமாா். தென்காசியில் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த அய்யாசாமி அறிமுகக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. பாலகிருஷ்ணன், ... மேலும் பார்க்க

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்

ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த தஙகச் சங்கிலியை ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். முக்கூடல் அருகே சிங்கம்பாறை காமராஜா் தெருவைச் சோ்ந்த சேவியா் அந்தோணிராஜ் மகன் மரியபூபாலன் (35). ஆட்டோ... மேலும் பார்க்க

தென்காசியில் பிப். 3இல் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா

தென்காசியில் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்டத் தலைவரும் மாநில ஸ்டாா்ட்அப் பிரிவுத் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட பாஜக... மேலும் பார்க்க