செய்திகள் :

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக தலைமையிலான பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சாலைவலத்தையும், முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

முன்னதாக, 26-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார்.

Reports have emerged that Prime Minister Narendra Modi is scheduled to visit Tamil Nadu for a two-day visit.

இதையும் படிக்க :ஆக.1 முதல் கனடா பொருள்களுக்கு 35% வரி அமல்! - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க