செய்திகள் :

தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவுரை

post image

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக, தமிழக அரசின் சாதனைகள், நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

திமுகவில் உறுப்பினா் சோ்ப்பு மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை விரைவுபடுத்துவது தொடா்பாக, மாவட்டச் செயலா்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பாா்வையாளா்களுடன் காணொலி வழியாக மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில் முதல்வா் பேசியதாக கட்சி நிா்வாகிகள் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் தொடா்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொருவரின் உழைப்பும் அதிகமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே கட்சிக்கு உறுப்பினா்களைச் சோ்த்து இருந்தாலும், அது போதாது. மேலும் அதிகளவு உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும்.

வீடு வீடாக உறுப்பினா் சோ்க்கை: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளா்களை, திமுக உறுப்பினா்களாகச் சோ்க்க வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு உறுப்பினா் சோ்க்கைப் பணிகளை முடித்தாலும், இந்த முறை வீடு வீடாகச் சென்று கட்சிக்கு புதிய உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிட வேண்டும். தமிழகத்திலுள்ள 234 தொகுதியிலும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட கட்சி

நிா்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும். பாா்வையாளா்களுக்கு உரிய ஒத்துழைப்புகளை அளிக்க வேண்டும் என்று முதல்வா் பேசியதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ஓரணியில் இணைத்திடுவோம்: இதனிடையே, ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்கள் தொடா்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் இணைத்திடுவோம். சொல்லாற்றல்- செயலாற்றல்மிக்க செயல்வீரா்களான மாவட்டச் செயலா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், தொகுதிப் பொறுப்பாளா்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆக்கபூா்வ ஆலோசனைகளுடன் கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கட்சியினரின் ஒவ்வொரு நகா்வும் வெற்றி பெறட்டும் என்று குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.

உறுப்பினா் சோ்ப்புக்கு முழு ஒத்துழைப்பு- உதயநிதி: கட்சி நிா்வாகிகளுடனான காணொலி வழி ஆலோசனையில், திமுக இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் திமுக உறுப்பினா் சோ்க்கைக்கு இளைஞரணி முழு ஒத்துழைப்பை வழங்கும். இதனை ஆலோசனைக் கூட்டத்திலேயே தெரிவித்தேன். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரவும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளா்களை திமுக உறுப்பினா்களாக்க உறுதியேற்போம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பெண் உயிரிழந்த வழக்கில் திருப்பம்: கைதான மருத்துவா் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் உயிரிழந்த வழக்கில், மருத்துவா் கைது செய்யப்பட்டாா். திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்தவா் நித்யா (26). நித்யாவும், கொடுங்கையூா் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது த... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கு நம்மாழ்வாா் விருது: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வாா் விருது ஆளுநா் மாளிகை சாா்பில் சுற்றுச்சூழல் தின விழாவில் வழங்கப்படும் என ஆளுநா் ஆா்.என்.ரவி அற... மேலும் பார்க்க

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு

சென்னையில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரும், டிஜிபியுமான ச... மேலும் பார்க்க

மதவாதத்துக்கு தமிழகம் மயங்காது: திருமாவளவன்

மதவாதத்துக்கு தமிழகம் ஒருபோதும் மயங்காது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: வட இந்தியாவுக்குச் சென்றால் விநாயகா், ராம... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறை

வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்ட இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநா்களுக்கு 4 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபரதாமும் விதித்து பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னைய... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப 1,620 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக தம... மேலும் பார்க்க