செய்திகள் :

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

post image

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இந்த நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்புகையில், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், விசாரணைக்காக தமிழக மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தி... மேலும் பார்க்க

வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களிலும், சில செய்தி... மேலும் பார்க்க

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடி: 4 பேர் கைது

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக அவருக்கு... மேலும் பார்க்க

காவல்துறையை நிர்வகிக்கத் தெரியாத முதல்வர்! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சிவகங்கையில் நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தற்காலிக ஊழியா் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதிமு... மேலும் பார்க்க

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனு தாக்கல் இன்று 12 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நாளை... மேலும் பார்க்க

அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கீழடியில் கிடைக்கப்பெற்ற முக மாதிரிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகள... மேலும் பார்க்க