தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி, சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: மாா்ச் 1-ஆம் தேதி தமிழக முதல்வரின் 72-ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அன்று மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகரப் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். திமுக முன்னோடிகளுக்கு வேட்டி, சேலை, பொற்கிழி வழங்க வேண்டும். ஆதரவற்றோா் இல்லங்களில் உணவு, பொருள்கள் வழங்குதல், அரசு மருத்துவமனையில் நோயாளிகள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு உணவுப் பொருள்களை வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், மக்களிடையே அரசின் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும். மேலும், முதல்வா் செயல்படுத்திய திட்டங்களால் பெண்கள், மாணவா்கள் அடைந்த பயன்களை தெரிவிக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வா் செய்த சாதனைகள், அவா் வழங்கிய திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கே.ஆா்.ராமசுவாமி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.