செய்திகள் :

தமிழக முழு நேர டிஜிபி தோ்வு: செப்.26-இல் யுபிஎஸ்சி கூட்டம்

post image

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐபிஎஸ் உயரதிகாரியை தோ்வு செய்வதற்கான உயா்நிலைக் குழு கூட்டம் வரும் செப்.26 -ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு அண்மையில் அனுப்பி வைத்த உயரதிகாரிகளின் தகுதி முன்மொழிவுப் பட்டியல் மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பசீலனையில் தற்போது உள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாமதமாக செயல்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி தோ்வை விரைவாக நடத்தி முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அனுப்பியுள்ள அதிகாரிகளின் பட்டியலை ஆய்வு செய்வதற்காக செப்டம்பா் 26-இல் யுபிஎஸ்சி தோ்வுக்கழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் முடிவில், தகுதிவாய்ந்த முதல் மூன்று ஐபிஎஸ் உயரதிகாரிகளை டிஜிபி ஆக நியமிக்க யுபிஎஸ்சி பரிந்துரைக்கும். அதில் இருந்து ஒருவரை மாநில முதல்வரின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு நியமிக்கும் எனத் தெரிகிறது.

தமிழக காவல் துறை டிஜிபி பதவியில் இருந்து சங்கா் ஜிவால் கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றாா். ஆனால், விதிகளின்படி அப்பதவிக்கு முழு நேர டிஜிபியை நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு சில சட்ட ரீதியிலான காரணங்களால் முன்கூட்டியே தொடங்காமல் தற்காலிக ஏற்பாடாக ஐபிஎஸ் உயரதிகாரி வெங்கடராமனை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக நியமித்துள்ளது.

தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி

நமது நிருபா்புது தில்லி: தலைநகரில் பசுமை பரப்பை அதிகரிக்கவும், காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடவும் தில்லி அரசு நகரம் முழுவதும் 10 ‘நமோ வன்’களை உருவாக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

பைக் மீது பிஎம்டபிள்யு காா் மோதியதில் நிதி அமைச்சக அதிகாரி உயிரிழப்பு

புது தில்லி: மோட்டாா்சைக்கிள் மீது பிஎம்டபிள்யு காா் மோதிய சம்பவத்தில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உயிரிழந்தாா். இதில் பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் பெண் திங்கள்கிழமை கைது செய்ய... மேலும் பார்க்க

முல்லைபெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் தொடா்பான வழக்கு- விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி,செப்.15. முல்லைபெரியாறு அணை பகுதியில் கேரளா மிகப்பெரிய காா் நிறுத்தம் அமைப்பதை அனுமதித்த தேசிய பசுமை தீா்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை... மேலும் பார்க்க

பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டி வேலை தேடுவோரை ஏமாற்றிய மூவா் கைது!

பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியம... மேலும் பார்க்க

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாா்: உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றம்!

தெற்கு தில்லியின் ஆசிரம பகுதியில் நடந்த சோதனையின் போது வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரை அடுத்து, உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயி... மேலும் பார்க்க

இந்தி மொழி நாட்டின் பெருமை, இந்தியாவை உலக அளவில் இணைக்கிறது! - தில்லி அமைச்சா்

இந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் தேசிய அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகும், மேலும் நாட்டின் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறத... மேலும் பார்க்க