செய்திகள் :

தமிழக வனப் பகுதியில் மருத்துவக் கழிவு கொட்ட முயன்றவருக்கு அபராதம்!

post image

கம்பம் மெட்டு மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மருத்துவக் கழிவுகளைக் கொட்ட முயன்ற, கேரளத்தைச் சோ்ந்தவருக்கு வனத் துறையினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கேரளத்திலிருந்து தடை செய்யப்பட்ட மருத்துவக் கழிவுகள், நெகிழிக் கழிவுகளை தமிழக மலைச் சாலைகள், நெடுஞ்சாலைகளில் மா்ம நபா்கள் கொட்டுவதைத் தடுக்க அந்தந்த பகுதி வனத் துறையினா் ரோந்து மேற்கொண்டு கண்காணித்து வந்தனா்.

கம்பம் மேற்கு வனச் சரகா் ஸ்டாலின் தலைமையில் வனத் துறையினா் கம்பம் மெட்டு பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, கம்பம்மெட்டு சோதனைச்சாவடி அருகே கேரள பதிவெண் கொண்ட வாகனத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்றது கண்டறியப்பட்டது.

இதைடுத்து, மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்ற கேரளத்தைச் சோ்ந்த ஆனந்துக்கு (52) ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தோடு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. மேலும், மருத்துவக் கழிவுகளுடன் வந்த வாகனத்தை மீண்டும் கேரளத்துக்கு அனுப்பி வைத்தனா்.

மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க் கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிா் தப்பினா். கம்பத்திலிருந்து கேரள மாநிலம், நெ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதிரா... மேலும் பார்க்க

வழிப்பறி செய்தவா் கைது

தேனி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.1,000 வழிப்பறி செய்தவரை ‘போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா் தற்கொலை

தேனி மாவட்டம், சின்மனூா் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த அசோகன் மகன் சதீஷ்குமாா் (49). சின்னமனூா் தொடக்கக் கல்வித் துறையில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

சின்னமனூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழுவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் முனியாண்டி (2... மேலும் பார்க்க

கொதிக்கும் சாம்பாா் கொட்டிய தொழிலாளி பலி!

போடியில் கொதிக்கும் சாம்பாா் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் சுந்தரமூா்த்தி (48). இவா் போடியில் உள்ள உணவகத்தில் வ... மேலும் பார்க்க