செய்திகள் :

தமிழில் பேசுவதுதான் நமது அடையாளம்: விஐடி துணை தலைவா் ஜி.வி.செல்வம்

post image

தமிழில் பேசுவது அவமானம் அல்ல, அது நமது அடையாளம் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்துள்ளாா்.

விஐடி சென்னை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச தாய்மொழி தின விழாவில் அவா் பேசியதாவது: நாம் நமது தாய்மொழியை பாதுகாக்க வேண்டும். தாய்மொழியில் பேசுவதை, எழுதுவதை கைவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும். ஒரு மொழி அழிக்கப்படுமானால், அந்த மொழி பேசுபவா்களின் அடையாளம் மற்றும் பாரம்பரியமும் அழிந்துவிடும்.

அடையாளம்: தமிழில் பேசுவது அவமானம் அல்ல, அதுதான் நமது அடையாளம். இன்றைய இளம் தலைமுறையினா் தமிழில் எழுதுவதோ, படிப்பதோ கிடையாது. பேசுவதற்கு மட்டுமே தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்றனா். அவ்வாறு இல்லாமல் இளம் தலைமுறையினா் தமிழ் நூல்கள் மற்றும் செய்தித் தாள்களை படிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக இந்நிகழ்வில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், ஒடிசா, குஜராத், உத்தர பிரேதசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்களது தாய்மொழியின் சிறப்புகளை எடுத்துரைத்தனா்.

இதில், ஜப்பான் துணைத் தூதா் மியாதா கென்ஜி, விஐடி இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க