"நான் ரகசிய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்" - நடிகை தேவயானி...
`தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை..!" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது திராவிட திரு நல்நாடும் எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர்பான விவாதம் தொடர்ந்த நிலையில், ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிறைவு சான்றிதழ் வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற 19 நபர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தில் அடுத்துப் பயன்பெறப்போகும் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாகவெல்லாம் பாடப்படவில்லை. பாடல் பாடப்படும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் பாடப்படுபவரின் குரல் கேட்கவில்லை. அதனால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாக கேட்கும்படி பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் முறையாகப் பாடப்பட்டது. இதை ஒரு பிரச்னையாக மாற்றவேண்டாம்." என விளக்கமளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88