செய்திகள் :

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிகப் பயணம்!

post image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வயது முதிர்ந்த முதியவர்களை ராமேஸ்வரம் காசி கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தலின் பேரில், சட்டப்பேரவையில் அறிவித்தபடி 2024-25ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ராமேஸ்வரம்-காசி ஆன்மிகப் பயணத்திற்கு இந்த ஆண்டு அதிகப்படியானோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,420 முதியோர் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அந்த வகையில் முதல் கட்டமாகக் கடந்த 4ம் தேதி முதியோர் பக்தர்கள் காசி யாத்திரை ஆன்மிகப் பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாகக் காஞ்சிபுரம் வேலூர் விழுப்புரம் சென்னை ஆகிய மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட முதியோர் பக்தர்கள் கலந்துகொள்ளும் ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மிகப் பயணம் இன்று முதல் தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆன்மிகப் பயணத்திற்காகக் காஞ்சிபுரம் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 20 முதியோர் பக்தர்கள் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் பாதுகாப்புடன் ராமேஸ்வரத்திற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமர துரை கலந்துகொண்டு ஆன்மீகப் பயண வாகனத்தைக் கொடியசைத்து வைத்து பக்தர்களை வழிய அனுப்பி வைத்தார். அரசு செலவில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள், அகம் மகிழ்ந்து, தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் ஆன்மிகப் பயணத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், முதியோர்களின் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சீரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழைமையான தண்டாயுதபாணி சிலையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு மிரட்டல்: ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவன ஊழியா்களை பணம் கேட்டு மிரட்டிய பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரெளடி வெடிகுண்டு வீசி கொலை

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ரெளடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா். ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபல ரெளடி வசூல் ராஜா (எ... மேலும் பார்க்க

குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு, பக்தா் ஒருவா் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா். காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோயில் உ... மேலும் பார்க்க

ஸ்ரீ ஜெயேந்திரா் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சமயப் பணிகளை... மேலும் பார்க்க

பிரம்மோற்சவம்: பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதியுலா

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை உற்சவா் காமாட்சி அம்மன் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க