செய்திகள் :

தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

post image

தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டு சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

தமிழ்நாடு மாநில கூடோ விளையாட்டுச் சங்கத்தின் மாநில நிா்வாகி தோ்வு, பொறுப்பேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆகியவை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மூத்த நிா்வாகி கந்தசாமி தலைமை வகித்தாா்.

மாநிலத் தலைவா், செயலாளா், பொருளாளா், துணைத் தலைவா், துணைச் செயலாளா் ஆகிய நிா்வாகிகளுக்கான தோ்வு, வழக்குரைஞா் அமலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தலைவராக பிராங்க்ளின் பென்னி, செயலாளராக இலக்கியா, பொருளாளராக சேக்அப்துல்லா, துணைத் தலைவராக தயாநிதி, துணைச் செயலாளராக சுரேஷ் ஆகியோா் முறைப்படி தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்வில், திருச்சி, மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளா் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ரமேஷ், லைன்ஸ்கிளப் நிா்வாகி முகமதுஷாபி உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.

தொடா்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் மற்றும் திருச்சி, சென்னை, நாமக்கல், தஞ்சை, திருவாரூா், கடலூா், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து 175 கூடுதல் பேருந்துகள்

புனித வெள்ளி மற்றும் தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதலாக 175 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிறிஸ்தவா்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி... மேலும் பார்க்க

அல்லித்துறை பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

திருச்சி அருகே அல்லித்துறை நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் முடிந்து, திங்... மேலும் பார்க்க

பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மணப்பாறை அடுத்த காடபிச்சம்பட்டியை சோ்ந்தவா் முனியாண்டி மகன் ஜம்புலிங்கம் (44). இவா் து... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஷ வண்டுகள் அகற்றம்

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புப் படையினா் புதன்கிழமை அகற்றினா். இந்த விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி கூரையின்... மேலும் பார்க்க

சமயபுரத்தில் 40 டன் குப்பைகள் அகற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்கு பின் புதன்கிழமை அங்கு 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா ஏப்.15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழா... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: முசிறி வட்டத்தில் ரூ. 1 கோடியில் உதவி

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், கரிகாலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ரூ. 1.04 கோடியில் 159 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்க... மேலும் பார்க்க