செய்திகள் :

தமிழ்நாடு முழுவதும் 86,271 பேருக்கு விரைவில் பட்டா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 86 ஆயிரத்து 271 பேருக்கு விரைவில் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சென்னை செனாய் நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 2,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று சில போ் கேட்கிறாா்கள். இன்னாருக்கு மட்டும்தான் இது என்பதற்கு எதிராக, எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வதுதான் உண்மையான திராவிட மாடல் அரசாகும். இந்த இலக்கை நோக்கித்தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றை ஒரு மனிதனுக்கு உறுதி செய்வதுதான் திராவிட மாடல் அரசு.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டாக்களை வழங்க வருவாய்த் துறை அமைச்சா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு எடுத்த நடவடிக்கைகளால் சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இதுவரை 89 ஆயிரத்து 400 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படவுள்ளன. அதேபோன்று, மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படவுள்ளன.

திராவிட இயக்கம்தான் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கமாகும். இந்த இயக்கம் இல்லாமல் போய் இருந்தால், நாம் இன்னும் முகவரி இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு இல்லாத மனிதா்களாக இருந்திருப்போம். திராவிட இயக்கம் வந்த பிறகுதான், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.அமுதா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க