செய்திகள் :

'தமிழ்நாட்டில் இருக்கிறோமா... வேறு எங்காவது இருக்கிறோமா?' - நயினார் நாகேந்திரன் காட்டம்

post image

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை பாஜக அலுவலகத்தில் புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து படுகொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.

நயினார் நாகேந்திரன்

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சிவகிரியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு பகுதியில் பெரும்பாலான மக்கள் தங்களின் தோட்டத்தில் வசிப்பார்கள். திமுக ஆட்சியில் இல்லாத காலத்தில் அவர்கள் அச்சம் இல்லாமல் இருந்தனர்.

கொலை
கொலை

தற்போது தோட்டத்தை காலி செய்துவிட்டு வெளியூர் செல்கின்றனர்.  பல்லடம் பகுதியில் கஞ்சா போதையால் 7 கொலைகள் நடந்ததுள்ளன. தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

மதம் குறித்து பேசுவதாக தூண்டி விடுவதே முதலமைச்சர் தான்!

நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா அல்லது வேறு எங்காவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழல் இருக்கிறது. கொங்கு பகுதியில், கோடை விடுமுறைக்கு தோட்டத்துக்கு வந்த குழந்தைகள் உள்பட அனைவரும் திரும்பி செல்கிறார்கள். மதப் பிரச்னைகள் குறித்து நாங்கள் பேசவில்லை.

முதலமைச்சர்

நாங்கள் முதலமைச்சரின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்குவதற்காக மதம் குறித்து பேசுவதாக தூண்டி விடுவதே முதலமைச்சர் தான். இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் ஓட்டுகளும் பாஜகவுக்கு வரும். எனக்கும் வந்துள்ளது.” என்றார்.

'ஸ்டாலின் மாடல் ஆட்சி; சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'- எடப்பாடி விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' என்று ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவ... மேலும் பார்க்க

"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்..." - திருமாவளவன்

ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின்... மேலும் பார்க்க

`சண்டையிடுவதில் எந்த பலனும் இல்லை..!’ - மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விரும்பும் இளவரசர் ஹாரி

பிரிட்டன் இளவரசர் ஹாரி பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தனது மனைவி, குழந்தைகளுடன் மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விருப்பம் தெரிவித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்க்க... மேலும் பார்க்க

'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!' - முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்' ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், "நம் உயிருடன் கலந்திருக்... மேலும் பார்க்க

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்... மேலும் பார்க்க

India - Pakistan: அமெரிக்கா, சீனா, மலேசியா... போர் ஏற்பட்டால் உலக நாடுகள் யார் பக்கம்? | Explained

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த விரிசல் போராக உருவெடுக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரண்டு நாடுகளும் ... மேலும் பார்க்க