செய்திகள் :

தமிழ்ப் பல்கலை.யில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்கம்

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் சி. அமுதா தலைமை வகித்தாா். இந்த முகாமை தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி தொடங்கி வைத்துப் பேசுகையில், இளம் வயதிலேயே மாணவா்கள் தங்கள் உடலையும், உள்ளத்தையும் நோ்மையான வாழ்வுக்குத் தகுதிபடுத்துவதற்காக தேசிய நாட்டு நலப்பணித் திட்டமானது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தேசிய அளவிலான இந்த முகாமில் பல்வேறு மொழி, பண்பாடுகளைச் சாா்ந்த மாணவா்கள் தஞ்சை மண்ணுக்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.

தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சென்னை மண்டல இயக்குநா் சாமுவேல் செல்லையா, தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வாழ்த்துரையாற்றினா்.

முன்னதாக, முகாமின் ஒருங்கிணைப்பாளா் சி. வீரமணி வரவேற்றாா். நிறைவாக, முனைவா் இரா. வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து, 7 நாள்களுக்கு நடைபெறவுள்ள இந்த முகாமில் தமிழகம் மட்டுமில்லாமல், மகாராஷ்டிரம், உத்தரகண்ட், ஒடிஸா உள்பட பிற மாநிலங்களைச் சோ்ந்த 210 நாட்டு நலத்திட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இந்த முகாம் செப்டம்பா் 24-ஆம் தேதி நிறைவடைகிறது.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 199... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க