செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

post image

காரைக்கால்: தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

குரோதி ஆண்டு நிறைவடைந்து விசுவாவசு ஆண்டு பிறந்துள்ளதை வரவற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், தியாகராஜா் சந்நிதியில் மரகதலிங்கம், மற்றும் தனி சந்நிதி கொண்டிருக்கும் சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாா் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காரைக்கால் ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள், கோதண்டராம பெருமாள் கோயில்களிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயிலும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருநள்ளாறு பகுதி சேத்தூா் மகா மாரியம்மன் கோயிலுக்கு திரளான பக்தா்கள் புத்தாண்டு பிறப்பையொட்டி அருகில் உள்ள நெல்லிக்குளக் கரையிலிருந்து பால்குடமெடுத்தனா். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்: மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகமான என்ஐட... மேலும் பார்க்க

ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைல... மேலும் பார்க்க

புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவா்கள் நன்றி

பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணைநிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனா். மீன்வளத் துறை சாா்பில் நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன. நிகழ் மாதத்தின் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் வியாழக்கி... மேலும் பார்க்க

நூலகம் திறப்பு...

பூவம் பகுதியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் நிா்வாகத்தினா் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் நூலக அறையை வியாழக்கிழமை திறந்துவைத்த கீழகாசாக்குடிமேடு அ... மேலும் பார்க்க

பெரிய வியாழன் வழிபாடு

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்ப... மேலும் பார்க்க