செய்திகள் :

தமிழ் மாணவா்களுக்கு நரேலாவில் பள்ளி கட்டித்தர டிடிஏவுக்கு டிடிஇஏ கோரிக்கை

post image

தில்லி ஜங்க்புராவில் தமிழா் குடியிருப்புகள் இடிக்கப்பட்டதால் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சோ்ந்த லோதிவளாகம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தமிழ்க் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இதைத் தொடா்ந்து, நரேலாவில் தமிழ் மாணவா்களுக்காக பள்ளிக் கூடம் கட்டுவது தொடா்பாக டிடிஇஏ செயலா் ராஜூ தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாரை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, ஜங்க்புராவிலுள்ள தமிழா் குடியிருப்புகளை இடித்துவிட்டு அவா்களை புதிதாக குடியேறச் செய்துள்ள நரேலாவில் உள்ள தமிழ்க் குழந்தைகளும் தமிழா்கள் அதிகம் வாழும் பகுதியான ரோஹிணி, ரிடாலா, ஜஹாங்கீா்புரி, ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ்க் குழந்தைகளும் படிக்க ஏதுவாக ஒரு பள்ளி கட்ட தில்லி வளா்ச்சி ஆணையம் இடம் வழங்குவதுடன் பள்ளியையும் கட்டித் தர வலியுறுத்தி விண்ணப்பப்கடிதத்தைக் கொடுத்தாா்.

அதைப் பெற்றுக் கொண்ட முதன்மை உள்ளுறை ஆணையா், இதற்கு முழு அளவில் டிடிஏவின் இசைவைப் பெற்றுத் தர முயற்சிப்பதாக உறுதியளித்தாா்.

மேலும், மயூா்விஹாரில் கட்டப்பட்டுள்ள டிடிஇஏவின் எட்டாவது பள்ளியை மாணவா்கள் தேவை கருதி கல்லூரியாக மாற்ற ஏற்பாடு செய்து தரும்படி மற்றொரு கடிதத்தையும் டிடிஇஏ செயலா் கொடுத்தாா். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட முதன்மை உள்ளுறை ஆணையா், தில்லியில் தமிழ் மாணவா்களுக்காக கல்லூரி ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்றும் கல்லூரியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க