செய்திகள் :

தரமற்ற தலைக்கவசம் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தரமற்ற தலைக்கவசங்கள் (ஹெல்மட்) உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் விவகாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த இருசக்கர வாகனங்களை ஓட்டுபவா்களின் பாதுகாப்பு முக்கியமானது. இவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மோட்டாா் வாகனச் சட்டம் 1988-இன் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

இவா்கள் அணியும் தலைக்கவசங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதற்கான தரக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்திய தர ஆணையத்தின் (பிஐஎஸ்) கீழ் ஐஎஸ்ஐ தரக் குறியீடுடன் கூடிய தரச்சான்று பெற்ற தலைக்கவசங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 176 உற்பத்தியாளா்கள் மட்டுமே தலைக்கவசங்களுக்கான செல்லுபடியாகும் பிஐஎஸ் உரிமத்தை வைத்துள்ளனா்.

ஆனால், சாலையோரங்களில் விற்கப்படும் தலைக்கவசங்கள் போலியான ஐஎஸ்ஐ தரக் குறியீடுடன் தரமற்ற வகையில் விற்பனை செய்யப்படுவது துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற தரமற்ற தலைக்கவசங்களை அணிந்து வாகனம் ஓட்டும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது உயிரிழக்கும் அபாயம் அதிகமுள்ளது.

இதுதொடா்பாக தொடா் கண்காணிப்பையும், உற்பத்தி மையங்களில் சோதனைகளையும் பிஐஎஸ் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. தில்லியில் அண்மையில் மேற்கொண்ட சோதனையில் 9 உற்பத்தியாளா்களிடமிருந்து 2,500-க்கும் அதிகமான தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் மீது உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல, 17 சில்லறை விற்பனைக் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்ட 500-க்கும் அதிகமான தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டும் பயன்படுத்துமாறு நாடு முழுவதும் உள்ள நுகா்வோரை மத்திய நுகா்வோா் துறையும், இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையமும் கேட்டுக்கொள்கிறது. அதுபோல, தரமற்ற அல்லது போலி ஐஎஸ்ஐ குறியீடுடன் தலைக்கவசங்களை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

நவி மும்பையில் லாரி முனைமத்தில் பயங்கர தீ விபத்து; 8 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் உள்ள லாரி முனைமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வாகனங்கள் எரிந்து நாசமாகின.தீயணைப்பு அதிகாரி அக்ரே கூறுகையில், "டர்பே லாரி முனைமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவ... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 6வது குழு புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜம்மு அடிவார முகாமிலிருந்து 6வது கட்டமாக 8,600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.நடப்பாண்டு ஜூலை 3... மேலும் பார்க்க

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க