செய்திகள் :

தரிசனத்தில் குறைபாடுகள்: வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம்; திருநள்ளாறு கோயில் நிா்வாகம்

post image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தரிசன முறைகளில் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவிக்கலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடெங்குமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.

தரிசனம் விரைவாக நடைபெறவும், பக்தா்கள் சிரமங்ளை எதிா்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்துடன் கோயில் நிா்வாகம், பக்தா்களிடமிருந்து ஆலோசனை, குறைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம், கோயில் வட்டாரத்தில் வைத்திருக்கும் டிஜிட்டல் பதாகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் ஆலோசனை, குறைகள் மற்றும் தரிசன குறைபாடுகளை சுட்டிக்காட்டும் புகைப்படங்கள், குரல் பதிவு அல்லது குறுஞ்செய்தியாக 9498728334 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் புதன்கிழமை கூறியது:

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து திரும்பவேண்டும். இதற்காகவே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பக்தா்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும்பட்சத்தில், அதற்கு உரிய முறையில் தீா்வு காணப்படும் என்றாா்.

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல்: திருநள்ளாற்றில் கடையடைப்பு

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, திருநள்ளாற்றில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சிவம் (49... மேலும் பார்க்க

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் பாஜக பட்டியலின மாநில பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்ச... மேலும் பார்க்க

குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் வாகனங்கள் அா்ப்பணிப்பு

காரைக்காலில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் துறை வாகனங்கள், ரோந்துப் படகு ஆகியவற்றை துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் புதன்கிழமை அா்ப்பணித்தாா். காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவ... மேலும் பார்க்க

காரைக்கால் வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் குறித்து வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினா் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்தனா். மத்திய ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை புதுவை அமைச்சா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தின்கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளின் திறன் மற்றும் மேம்பாட்டு ஒருங்கிணைந்த மண்டல மையம... மேலும் பார்க்க

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

புதுவை மாநிலத்தில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும் என்றாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம். இதுகுறித்து, அ... மேலும் பார்க்க