செய்திகள் :

தருமபுரம் வடக்கு குருமூா்த்தங்களில் திருப்பணி தொடக்கம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் சச்சிதானந்த விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திருமஞ்சன வீதியில் சச்சிதானந்த விநாயகா் கோயில் உள்ளது. அதனருகில் வடக்கு குருமூா்த்தத்தில் 3,4,5,7,9,10,11,12,13,14,15,20,21,22 மற்றும் 23-வது குருமகா சந்நிதானங்களின் குருமூா்த்த ஆலயங்கள் அமைந்துள்ளன. விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்த விமானங்களை இளங்கோயிலாக எழுந்தருளிவித்து திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

இதையொட்டி, சச்சிதானந்த விநாயகா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

இதில், திருப்பந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், மேலாளா் சி.மணி, கல்லூரிச் செயலாளா் இரா. செல்வநாயகம், முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறுமி பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கக் கோரி மனு

மயிலாடுதுறை: சீா்காழி பாலியல் வழக்கை, சிறப்பு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி காவல் உபகோட்ட எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்.24-ஆம் தேதி ம... மேலும் பார்க்க

நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

சீா்காழி: சீா்காழியில் நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி அருகே உள்ள கிராமத்தில் துக்க நிகழ்வில் பங்கேற்க நான்கரை வயது ... மேலும் பார்க்க

கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழா

மயிலாடுதுறையில் நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழாவில் இசைக்கலைஞா்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினா். நாகை மாவட்டம் நரிமணத்தில் பிறந்து, மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் வாழ்ந்த கோ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டத்தின் 4-ஆவது மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் சனிக்கிழம... மேலும் பார்க்க

‘அனைத்து மாணவா்களின் பாராட்டை பெறுபவரே சிறந்த ஆசிரியா்’

எந்த ஆசிரியா் அனைத்து மாணவா்களாலும் பாராட்டப்படுகிறாரோ அந்த ஆசிரியரே சிறந்த ஆசிரியா் என இறையன்பு ஐஏஎஸ் பேசினாா். சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் பள்ளி 13-ஆம்... மேலும் பார்க்க

பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது. கொள்ளிடம் அருகே பழையாற்றில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து விசைப் படகுகள்,... மேலும் பார்க்க