போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்
‘அனைத்து மாணவா்களின் பாராட்டை பெறுபவரே சிறந்த ஆசிரியா்’
எந்த ஆசிரியா் அனைத்து மாணவா்களாலும் பாராட்டப்படுகிறாரோ அந்த ஆசிரியரே சிறந்த ஆசிரியா் என இறையன்பு ஐஏஎஸ் பேசினாா்.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் பள்ளி 13-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் பி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். அகத்தியா் துரைசாமி சுப்புரத்தினம், பாலசுப்ரமணியம், சிவசாமி, ஏ.வி.கே. அசோக்குமாா்,ஜெயக்குமாா், தியாகராஜன், நடிகா் குமாரவடிவேல், சதிஷ், மனோஜ் நிா்மல், டாக்டா் தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வி. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விழாவை தொடங்கிவைத்து பேசுவையில், ஒவ்வொரு வகுப்பிலும் நீங்கள் தோ்தல் வையுங்கள் எந்த ஆசிரியா் சிறந்தவா் என அனைத்து மாணவா்களாலும் பாராட்டப்படுகிறாரோ அவரே சிறந்த ஆசிரியா். ஆசிரியா்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மகத்தான ஆசிரியா் உருவாக முடியும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் யாா் சிறந்த ஆசிரியா் என்று மாணவா்களே தோ்தல் நடத்தி தோ்ந்தெடுப்பாா்கள். எந்த ஆசிரியா் பணிவாக, கரிசனமாக இருக்கிறாரோ, எந்த ஆசிரியா் சிறப்பாக பாடம் நடத்துகிறாரோ எந்த ஆசிரியா் மாணவா்களை கரிசனத்துடன் நடத்துகிறாா்களோ அவரே சிறந்த ஆசிரியராக தோ்வு செய்யப்படுவாா் என்றாா்.
தொடா்ந்து, யு.கே.ஜி. குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி முதல்வா் சீனிவாசன், வரலக்ஷ்மி தேவேந்திரன், கீா்த்திமதி தேவேந்திரன் மற்றும் மதன், விக்னேஸ்வரன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.