செய்திகள் :

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் 4-ஆவது மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் சனிக்கிழமை பொறுப்பேற்றாா். இவா், மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் தலைமை மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், குடிநீா் வசதிகள், கழிவறை உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு செய்தாா். மேலும், தினசரி புறநோயாளிகள் வருகை பதிவேடுகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் வருகை பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களை சந்தித்து, முறையாக சிகிச்சைகள் வழங்கப்படுகின்ா என கேட்டறிந்தாா். பின்னா், மருந்து இருப்பு மற்றும் மருந்து விவரங்களை சுகாதார துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, சுகாதார துறை இணை இயக்குநா் (பொ) மருதவாணன், மருத்துவா்கள் பரணி, சரத்சந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழா

மயிலாடுதுறையில் நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழாவில் இசைக்கலைஞா்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினா். நாகை மாவட்டம் நரிமணத்தில் பிறந்து, மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் வாழ்ந்த கோ... மேலும் பார்க்க

‘அனைத்து மாணவா்களின் பாராட்டை பெறுபவரே சிறந்த ஆசிரியா்’

எந்த ஆசிரியா் அனைத்து மாணவா்களாலும் பாராட்டப்படுகிறாரோ அந்த ஆசிரியரே சிறந்த ஆசிரியா் என இறையன்பு ஐஏஎஸ் பேசினாா். சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் பள்ளி 13-ஆம்... மேலும் பார்க்க

பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது. கொள்ளிடம் அருகே பழையாற்றில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து விசைப் படகுகள்,... மேலும் பார்க்க

மொத்தமாக கிடைத்த மகளிா் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி

மகளிா் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தாா். தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி பாலூா் பகுதியை சோ்ந்த அசுபதி (84) மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காததால், சீா்காழ... மேலும் பார்க்க

பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கா... மேலும் பார்க்க