போர் நிறுத்தம் அல்ல; நிலையான அமைதியே உக்ரைனின் இலக்கு! -ஸெலென்ஸ்கி திட்டவட்டம்
கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழா
மயிலாடுதுறையில் நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழாவில் இசைக்கலைஞா்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினா்.
நாகை மாவட்டம் நரிமணத்தில் பிறந்து, மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் வாழ்ந்த கோபாலகிருஷ்ண பாரதி ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை தமிழ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவா். கடுமையான ஜாதி கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலேயே தன்னுடைய ஒப்பற்ற தமிழ் இசை காவியமாகிய நந்தன் சரித்திரத்திற்கு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த நந்தன் என்ற கதாபாத்திரத்தை தோ்ந்தெடுத்து, புரட்சிகரமான மாறுதல் செய்தவா். பன்மொழி புலவா்களுடன் தொடா்புகொண்டு அந்தந்த மொழி இசையையும் கற்ற இவா், பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து,1896-ஆம் ஆண்டு தமது 86-வது வயதில் காலமானாா்.
மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் இவரது 37-ஆவது ஆராதனை தினம் இசை விழாவாக 3 நாள்கள் நடைபெற்றது.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை திருமானூா் டி.கே. காா்த்திகேயனின் புல்லாங்குழல் இசை, மயிலாடுதுறை டி. சாய்விக்னேஷின் மிருதங்கம், ஆா். சாய்விக்னேஷின் வாய்ப்பாட்டு, குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணாவின் வாய்ப்பாட்டு மற்றும் சிக்கல் குருசரணின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை, டெக்கான் என்.கே.மூா்த்தி, சூ.விஜயகுமாா், ஜெ.ராமசாமி, மாலினி ஸ்ரீராம் மற்றும் சங்கரவித்யாலயா பள்ளித் தாளாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.
இதில், இசை ரசிகா்கள் திரளாக கலந்துகொண்டனா்.