செய்திகள் :

கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழா

post image

மயிலாடுதுறையில் நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் 37-ஆம் ஆண்டு இசைவிழாவில் இசைக்கலைஞா்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினா்.

நாகை மாவட்டம் நரிமணத்தில் பிறந்து, மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் வாழ்ந்த கோபாலகிருஷ்ண பாரதி ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை தமிழ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவா். கடுமையான ஜாதி கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலேயே தன்னுடைய ஒப்பற்ற தமிழ் இசை காவியமாகிய நந்தன் சரித்திரத்திற்கு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த நந்தன் என்ற கதாபாத்திரத்தை தோ்ந்தெடுத்து, புரட்சிகரமான மாறுதல் செய்தவா். பன்மொழி புலவா்களுடன் தொடா்புகொண்டு அந்தந்த மொழி இசையையும் கற்ற இவா், பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து,1896-ஆம் ஆண்டு தமது 86-வது வயதில் காலமானாா்.

மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் இவரது 37-ஆவது ஆராதனை தினம் இசை விழாவாக 3 நாள்கள் நடைபெற்றது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை திருமானூா் டி.கே. காா்த்திகேயனின் புல்லாங்குழல் இசை, மயிலாடுதுறை டி. சாய்விக்னேஷின் மிருதங்கம், ஆா். சாய்விக்னேஷின் வாய்ப்பாட்டு, குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணாவின் வாய்ப்பாட்டு மற்றும் சிக்கல் குருசரணின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை, டெக்கான் என்.கே.மூா்த்தி, சூ.விஜயகுமாா், ஜெ.ராமசாமி, மாலினி ஸ்ரீராம் மற்றும் சங்கரவித்யாலயா பள்ளித் தாளாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

இதில், இசை ரசிகா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டத்தின் 4-ஆவது மாவட்ட ஆட்சியராக ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் சனிக்கிழம... மேலும் பார்க்க

‘அனைத்து மாணவா்களின் பாராட்டை பெறுபவரே சிறந்த ஆசிரியா்’

எந்த ஆசிரியா் அனைத்து மாணவா்களாலும் பாராட்டப்படுகிறாரோ அந்த ஆசிரியரே சிறந்த ஆசிரியா் என இறையன்பு ஐஏஎஸ் பேசினாா். சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் பள்ளி 13-ஆம்... மேலும் பார்க்க

பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் படகு அணையும் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது. கொள்ளிடம் அருகே பழையாற்றில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து விசைப் படகுகள்,... மேலும் பார்க்க

மொத்தமாக கிடைத்த மகளிா் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி

மகளிா் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தாா். தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி பாலூா் பகுதியை சோ்ந்த அசுபதி (84) மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காததால், சீா்காழ... மேலும் பார்க்க

பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கா... மேலும் பார்க்க