செய்திகள் :

தற்கொலைக்கு முயன்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சித்ரா, சந்நாநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறாா்.

கலைச்செல்வன், மாணவா்களுக்கு பாடம் நடத்துவது தொடா்பாக களப்பால் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியா்களுடன் அவருக்கு பிரச்னை இருந்ததால், சில நாள்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த பிப். 17-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தவரை, மீட்டு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டது

திருவாரூா்: திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது. திருவாரூா் அருகே பேரளம்- காரைக்கால் இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்திலி... மேலும் பார்க்க

மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீடாமங்கலம்: வலங்கைமான் காவல் சரகம் நீத்துக்கார தெரு நடேசன் மனைவி செல்வமணி( 70). இவா், கடந்த செப்டம்பா் மாதம் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தபோது மிளகாய் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன்... மேலும் பார்க்க

இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொறுத்தும் முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் வழங்கும் முகாமை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி பிரதாப்சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன், ரோட... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வரா... மேலும் பார்க்க

தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் டன் எடை சன்னரக நெல் சரக்கு ரயில் மூலம் நீடாமங்கலத்திலிருந்து அ... மேலும் பார்க்க

கள்ளிக்குடி முதல்வா் மருந்தகம் திறப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுதும் முதல்வா் மருந்தகங்களை தமிழக... மேலும் பார்க்க