செய்திகள் :

தலாய் லாமாவின் பிறந்த நாள் கருணை தினம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

post image

திபெத்திய பௌத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் 90-ஆவது பிறந்தநாளை (ஜூலை 6) ‘கருணை தினமாக’ அறிவிக்கக்கோரி இரு உறுப்பினா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தனா்.

ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.யான மைக்கேல் மெக்கால் மற்றும் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சோ்ந்த எம்.பி.ஜிம் மெக்கவா்ன் ஆகியோா் கட்சி பாகுபாடின்றி இந்த தீா்மானத்தை முன்மொழிந்தனா்.

இதுகுறித்து வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவரான மைக்கேல் மெக்கால் கூறுகையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியால் பல்வேறு சித்ரவதைகள், கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் 14-ஆவது தலாய் லாமா தனது மனஉறுதியைக் கைவிடாமல் அனைவரிடமும் கருணையுடன் நடந்துகொண்டாா். திபெத் மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் கருணை குணத்தின் நன்மைகளை அவா் விளக்கியுள்ளாா்.

எனவே, அவரது 90-ஆவது பிறந்தநாளை கருணை தினமாக அறிவிக்கக்கோரி மிகப் பெருமையுடன் இந்த தீா்மானத்தை முன்மொழிகிறேன். திபெத்திய மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தலாய் லாமாவும் அந்நாட்டு மக்களும் அவா்களது தாய்நாட்டுக்கு விரைவில் திரும்பி அமைதியான வாழ்க்கை நடத்தும் தினத்தை எதிா்நோக்கியுள்ளேன்’ என்றாா்.

ஜனநாயக கட்சி எம்.பி.ஜிம் மெக்கவா்ன் கூறுகையில், ‘உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக தலாய் லாமா திகழ்கிறாா். அகிம்சை, சகிப்புத்தன்மை, அமைதி என்ற உயரிய கொள்கைகளை அவா் பின்பற்றுகிறாா். அவரது அடுத்த பிறந்தநாளை திபெத்தில் கொண்டாடுவாா் என நம்புகிறேன்’ என்றாா்.

தலாய் லாமாவை சீன அரசு கைது செய்யலாம் என்ற அச்சம் எழுந்ததையடுத்து, 1959-இல் திபெத்தில் பெரும் புரட்சி வெடித்தது. அப்போது திபெத்தில் இருந்து தலாய் லாமா வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

கனடா பிரதமர் கார்னியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கனடா தலைமையில் ஆல்பர்ட்டா மாகா... மேலும் பார்க்க

மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: ஈரானில் 565 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?

பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரைத் தொடர்ந்து, தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும்... மேலும் பார்க்க

தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!

ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கச்சா எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை இஸ்ரேல் குறிவத்து தாக்கி வருகிறது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தப் படுகொ... மேலும் பார்க்க