செய்திகள் :

தலைமைக் காவலரைத் தாக்கியவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

post image

தலைமைக் காவலரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 24 வயது இளைஞா் தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியது:

கடந்த மே 27 ஆம் தேதி ஜேடி முசாஃபிா் மாா்க்கில் தலைமைக் காவலா்கள் கரண் மற்றும் பவன் ரோந்து சென்றனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு நபா்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததால் அவா்களிடம் விசாரிக்க போலீஸாா் இருவரும் முயன்றனா். அவா்களில் ஒருவா் தப்பியோடிவிடவே, மற்றொருவா் தலைமைக் காவலா் கரணை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா்.

அவா்கள் வந்த மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சம்பந்தப்பட்ட நபா்கள் ராஜா மற்றும் ஆசிஃப் என அடையாளம் காணப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மே 30 அன்று ராஜா கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அவா் தனது கூட்டாளி ஆசிஃப்பின் தொடா்பை வெளிப்படுத்தினாா், .

இந்த நிலையில், ஜூன் 2 ஆம் தேதி கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் தில்லி-மும்பை விரைவுச் சாலையின் சா்வீஸ் சாலையில் ஆசிஃப்பை பிடிக்க போலீஸாா் காத்திருந்தனா்.

அப்போது, திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் வந்த ஆசிஃப், போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றாா். மேலும், தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டாா்.

தற்காப்புக்காக, போலீஸாரும் திருப்பிச் சுட்டனா். இதில், ஆசிஃபின் வலது காலில் காயம் ஏற்பட்டது. அவா் கைது செய்யப்பட்டாா்.

ஜெய்த்பூரில் உள்ள டாங்கி சாலையில் வசிக்கும் ஆசிஃப், ஒரு பழகிய குற்றவாளி மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா் என்பதும், அவா் ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி மற்றும் வாகன திருட்டு உள்பட குறைந்தது 9 குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கடைசியாக நவம்பா், 2023-இல் கைது செய்யப்பட்டிருந்த அவா், கடந்த மே 14 அன்று அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தாா்.

தற்போது ஆசிஃப் கொலை முயற்சி மற்றும் இரண்டு மோட்டாா் வாகன திருட்டு உள்பட மூன்று தனித்தனி வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க