தூத்துக்குடி: சுட்டிக்காட்டிய விகடன்; விறுவிறுவென தொடங்கிய ரவுண்டானா பணிகள்!
தலைமைக் காவலா் மாரடைப்பால் காலமானாா்
திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தகையை சோ்ந்தவா் காா்மேகம் (54) (படம்). இவா் நாகூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இவருக்கு இருதய வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவா் நாகையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காா்மேகம் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். காா்மேகத்துக்கு மனைவி சரஸ்வதி, மகன் கோபிநாத் உள்ளனா்.