செய்திகள் :

தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை `டு' இஸ்ரோ டெக்னீஷியன்... இளைஞரின் நம்பிக்கையூட்டும் பயணம்!

post image

கடின உழைப்புதான் என்றைக்கும் கைகொடுக்கும் என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிராவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தான் நினைத்து பார்க்க முடியாத ஒரு இடத்தில் வேலையில் சேர வேண்டும் என்று நினைத்து கடின உழைப்பால் அதனை சாதித்து காட்டி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் இருக்கும் கெய்ர்போதி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ் ஹேம்ராஜ். இவரது தந்தை அரசு பள்ளியில் பியூனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ராம்தாஸ் மிகவும் கடினமாக படித்து 12வது வகுப்பு வரை முடித்தார். ஆனால் அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்க அவரிடம் பணம் இல்லை. இதனால் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி பி.ஏ தேர்ச்சி பெற்றார். அதோடு மட்டுமல்லாது தள்ளுவண்டியில் பகல் நேரத்தில் வியாபாரம் செய்தார்.

தெருக்களில் பானிபூரி விற்பனை செய்து கொண்டே படித்தார். இஸ்ரோவில் வேலைக்கு சேர வேண்டும் என்பது ராம்தாஸ் கனவாக இருந்தது. இதற்காக அருகில் உள்ள ஐ.டி.ஐ யில் சேர்ந்து பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக் படிப்பை படித்து முடித்தார். அடிக்கடி இஸ்ரோவில் வேலைக்கான அறிவிப்பு வருகிறதா என்பதையும் கவனித்துக்கொண்டே இருந்தார். 2023ம் ஆண்டு இஸ்ரோ நிர்வாகம் பயிற்சியாளர் வேலைக்கு ஆள்தேவை எனக் கூறி விளம்பரம் செய்தது. உடனே ராம்தாஸ் அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். இதற்கு நாக்பூரில் எழுத்துத்தேர்வு நடந்தது. இத்தேர்வில் வெற்றிகரமாக ராம்தாஸ் தேர்ச்சி பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் திறன் ஆய்வு சோதனைக்காக ராம்தாஸ் அழைக்கப்பட்டார். இந்த டெஸ்டிலும் ராம்தாஸ் தேர்ச்சி பெற்றார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோவில் பம்ப் ஆபரேட்டர் வேலைக்கு ராம்தாஸ் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் ராம்தாஸ் தனது புதிய வேலையில் சேர்ந்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் இப்போது அவர் பணியில் சேர்ந்துள்ளார். அவரை அவரது கிராம மக்கள் வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினை... மேலும் பார்க்க

’வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன்'- ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சி... மேலும் பார்க்க

Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்?

வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.யார் இ... மேலும் பார்க்க

"என் குடும்பமே விஷம் குடித்துவிட்டது; நானும்..." - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் விபரீத முடிவு

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மர்மமான முறையில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளூர்வாசி ஒருவர் இரவு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது காருக்கு பின்னால் உத்தரகண்ட் நம்பர் பிளேட்டுடன் மற்றொரு க... மேலும் பார்க்க

Coimbatore: `ஆர்ப்பரிக்கும் வெள்ளம்' - கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியின் படங்கள் | Photo Album

கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை குற்றாலம்கோவை... மேலும் பார்க்க