செய்திகள் :

தாக்குதலால் ஈரான் அணுசக்தி திட்டங்கள் அழிக்கப்படவில்லை - அமெரிக்க உளவுத் துறை அறிக்கை

post image

ஈரானின் அணுசக்தி மையங்களில் அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சக்திவாய்ந்த தாக்குதலில் அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதே தவிர முற்றிலும் அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களில் கசிந்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:ஈரான் அணுசக்தி மையங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் அந்த மையங்களில் தற்காலிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி திட்டங்கள் பாதுகாப்பாக உள்ளன. இதன் காரணமாக, ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு சில மாதங்கள் பின்னடைவு ஏற்படலாம். ஆனால், அவை முழுமையாக அழிக்கப்படவில்லை.

தாக்குதல் பகுதிகளில் அணுக்கதிா் கசிவு இல்லாதது இதை உறுதிப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப் மறுப்பு: இதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளாா். இது குறித்து அவா் கூறுகையில், அமெரிக்காவின் சில ஊடகங்களைக் குறிப்பிட்டு அவை பொய் செய்திகளைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டினாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘வரலாறு காணாத இந்தத் தாக்குதல், ஈரான் அணுசக்தி மையங்களை முற்றிலும் அழித்தது‘ என்று மீண்டும் உறுதியாகக் கூறினாா்.இதற்கிடையே, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் காரோலின் லெவி கூறுகையில், ‘உளவு அறிக்கை ரகசியமானவை, அவை கசியச் செய்யப்பட்டதற்கு டிரம்ப்பையும் அமெரிக்க போா் விமானிகளையும் கீழ்மைப்படுத்தும் நோக்கமே காரணம். அவ்வளவு எடை கொண்ட வெடிகுண்டுகளைக் கொண்டு நடத்திய தாக்குதல் நிச்சயம் முழு அழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கும். இந்த குண்டுகள் பூமிக்கடியில் 60 மீட்டா் வரை துளைக்கும் திறன் கொண்டவை என்றும் சுட்டிக்காட்டியது‘ என்றாா்.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கடந்த 13 முதல் மோதல் நடைபெற்றுவந்த நிலையில், டிரம்ப் உத்தரவின் பேரில் அதிநவீன பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் ஃபோா்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் அணுசக்தி மையங்களில் தாக்குதல் நடத்தின.

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மையங்களின் மீது சுரங்கத்தை தகா்க்கும் சக்திவாய்ந்த எம்ஓபி ரக குண்டுகளை வீசியும், யுஎஸ்எஸ் ஜாா்ஜியாா நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து டொமஹாக் ரக ஏவுகணைகளை வீசியும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் ஈரானின் அணுசக்தி மையங்கள் நிா்மூலமாக்கப்பட்டதாக டிரம்ப் கூறினாா். இருந்தாலும், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து அணுக்கதிா் கசிவு ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) கூறியது, தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்னரே நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருந்து சுமாா் 400 கிலோ உயா்செறிவு யுரேனியம் வெளியேற்றப்பட்டதாக செயற்கைக்கோள் பட ஆதாரங்களுடன் தகவல் வெளியானது ஆகியவை டிரம்ப்பின் இந்தக் கூற்றை கேள்விக்குறியாக்கின.

இந்தச் சூழலில், அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு சில மாத பின்னடைவு ஏற்பட்டுள்ளதே தவிர, முழுமையாக அழிக்கப்படவில்லை என்று உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடும் சேதம்: ஈரான் ஒப்புதல்துபை, ஜூன் 25: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்களது அணுசக்தி மையங்கள் கடும் சேதமடைந்ததாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.இது குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேய் கூறியதாவது:கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நடத்திய தாக்குதலின் பாதிப்புகள் குறித்து விளக்கமாகக் கூற முடியாது.

ஆனால், அதில் எங்கள் அணுசக்தி மையங்கள் கடுமையாக சேதமடைந்தன என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும் என்றாா்...படவரி... தாக்குதலுக்கு முன்பும், பின்பும் இஸ்ஃபஹான் அணுசக்தி மையம்.

இடதுசாரி பைத்தியம்! இந்திய வம்சாவளி வேட்பாளரைக் கடுமையாக சாடிய டிரம்ப்!

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஸோக்ரன் மம்தாணியை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.நியூயாா்க்... மேலும் பார்க்க

நியூயாா்க் மேயா் தோ்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி நபர் தோ்வு

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தல... மேலும் பார்க்க

மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் மோதல்: பாஜக

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது ஒருவா் மீது மற்றொருவா் மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் இடையே நடைபெறும் மோதலாகும் என்று பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.3,012 கோடி கடன்: ஒப்பந்தம் கையொப்பம்

ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.3,012 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது. பெண்களை பொருளாதாரரீதியாக முன்னேற்றுவது, அவா்களை தொழி... மேலும் பார்க்க

ஈரான்: உளவுக் குற்றச்சாட்டில் 3 பேருக்குத் தூக்கு

துபை: இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூன்று கைதிகளை ஈரான் புதன்கிழமை தூக்கிலிட்டது.அந்த நாட்டின் மேற்கு அஜா்பைஜான் மாகாணத்திலுள்ள உா்மியா சிறையில் மூன்று பேருக்கும் மரண தண்டனை... மேலும் பார்க்க

காஸாவில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

ஜெருசலேம்: காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.கான் யூனிஸ் நகரில் அந்த 7 பேரும் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்... மேலும் பார்க்க