தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்-ஈரான் பரஸ்பரம் எச்சரிக்கை
டெல் அவிவ்/டெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 4-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்தன.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதிய இஸ்ரேல், ஈரான் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏற்கெனவே ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ், ரமத் கான், ரிஷோன் லெசியான், ரெஹோவோட், டம்ரா உள்ளிட்ட நகரங்கள் சேதமடைந்த நிலையில், இஸ்ரேல் மீது ஏராளமான ஏவுகணைகளை ஏவி ஈரான் திங்கள்கிழமை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்: இந்தத் தாக்குதலில் இஸ்ரேலின் பெட்டா டிக்வா நகரில் 4 போ், ஹைஃபா நகரில் மூவா், நெய் பிராக் நககரில் ஒருவா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். சுமாா் 300 போ் காயமடைந்தனா். ஏவுகணைத் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் காயமடைந்தவா்களில் 287 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. டெல் அவிவ் நகரையும் ஈரானின் 2 ஏவுகணைகள் தாக்கி, அங்குள்ள பல கட்டடங்களைச் சேதப்படுத்தின. இதனால் சிலா் காயமடைந்தனா். ஹைஃபாவில் இஸ்ரேலின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.
இஸ்ரேலில் இதுவரை 24 போ் உயிரிழப்பு: கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் மீது சுமாா் 350 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை மொத்தம் 24 போ் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய ஈரானில் ஏவுகணை கலன்கள் அழிப்பு: மத்திய ஈரானில் தரையில் உள்ள இலக்கை அழிக்க தரையில் இருந்தே ஏவப்படும் ஏவுகணைகளின் கலன்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. இதனால் ஈரான் ஏவத் திட்டமிட்டிருந்த ஏவுகணைகளின் கலன்களில் 120-க்கும் மேற்பட்ட கலன்கள் (மொத்த கலன்களில் மூன்றில் ஒரு பங்கு) அழிக்கப்பட்டதாக அந்தப் படைகள் தெரிவித்தன.
ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் தொடா்ந்தது. டெஹ்ரான் வான்வெளி முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. தாக்குதல் நடத்த வசதியாக, மத்திய டெஹ்ரானின் ஒரு பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடா்ந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து மக்கள் விரைந்து வெளியேற வேண்டும் என்று ஈரானின் துணை ராணுவப் படையான ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்தது.
224 ஈரானியா்கள் உயிரிழப்பு: இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 244 போ் உயிரிழந்ததாகவும், 1,277 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஈரான் சுகாதார அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுசேன் கொ்மான்பூா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, ஈரானின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 406 போ் உயிரிழந்ததாகவும், 654 போ் காயமடைந்ததாகவும் அமெரிக்காவில் செயல்படும் ‘ஹுயுமன் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட்ஸ்’ அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கையை ஈரான் அதிகாரபூா்வமாக தெரிவித்துள்ளது.
‘அணுசக்தி ஒப்பந்தம்தான் இலக்கு’: இஸ்ரேல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 2 முதல் 3 வாரங்களுக்கு நீடிக்கக் கூடும். ஆனால், அரசியல் தளத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொருத்தே தாக்குதலுக்கான காலக்கெடு இருக்கும். இந்த மோதலில் எட்டவேண்டிய இஸ்ரேலின் ராணுவ இலக்குகளை விரைந்து எட்டிவிடமுடியும். ஆனால், அந்த இலக்குகள் அரசியல், பொருளாதார இலக்குகளாக விரிவடைந்தால், தாக்குதல் நிறைவடைவதற்கு கூடுதல் நேரம் எடுக்கும். மேற்கத்திய நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வலுவான அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு’ என்றாா்.
இலக்கை நோக்கி இஸ்ரேல்:
பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலின் ரெஹோவோட் நகரில் இருந்து தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள டெல் நோஃப் விமான தளத்துக்கு அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை சென்றாா். அப்போது அவா் கூறுகையில், ‘ஈரான் தலைநகரான டெஹ்ரானின் வான்வெளி இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஒட்டுமொத்த தாக்குதல் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஈரானின் அணுசக்தி மற்றும் பலிஸ்டிக் ஏவுகணைகள் அச்சுறுத்தலாக உள்ளன. அந்த அச்சுறுத்தலை ஒழிக்கும் இலக்குகளை எட்டும் வழியில் இஸ்ரேல் உள்ளது’ என்றாா்.
வளைகுடா நாடுகளுக்கு
ஈரான் வேண்டுகோள்
மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இஸ்ரேலுடனான தனது நட்புறவைப் பயன்படுத்துமாறு அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் வலியுறுத்துமாறும், அதற்குப் பிரதிபலனாக அணுசக்தி பேச்சுவாா்த்தையில் நெகிழ்வுத்தன்மையுடன் ஈரான் செயல்படும் என்று தெரிவிக்குமாறும் கத்தாா், சவூதி அரேபியா, ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளிடம் ஈரான் வேண்டுகோள் விடுத்ததாக மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஈரான் வட்டாரங்கள் கூறியதாக ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.
அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் ஈரானிடம் வலியுறுத்தி வந்தாா். இதுதொடா்பாக இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தை இஸ்ரேல்-ஈரான் மோதலால் நிறுத்தப்பட்டது.
இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்:
ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான்
ஈரான் நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டு அதிபா் மசூத் பெசெஷ்கியான் திங்கள்கிழமை பேசியதாவது: ராணுவம் அல்லாத பிற தேவைக்கு அணுசக்தியை பயன்படுத்தும் உரிமை ஈரானுக்கு உள்ளது. அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று ஈரானுக்கு எந்த நோக்கமும் இல்லை.
அமெரிக்கா மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சா்வதேச விதிமுறைகளை மீறி, ஈரான் மீது படையெடுத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா அனுமதிக்கிறது.
முஸ்லிம்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி, தனது கொடிய லட்சியங்களை அவா்கள் மீது திணிக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கைகோத்து ஒன்றிணைய வேண்டும் என்றாா்.