செய்திகள் :

தாய்மொழி இனிது! தோனி கூறியதென்ன?

post image

தாய்மொழியில் வர்ணனையைக் கேட்பது பள்ளி பருவத்தை நினைவூட்டுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 18-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மோதின.

சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திராவின் அரைசதம் மற்றும் நூர் அகமதுவின் பந்துவீச்சால் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை அணி.

இந்த நிலையில், தாய்மொழி வர்ணனை குறித்து தோனி பேசியதாவது:

“போட்டியை நேரடியாகப் பார்க்கும்போது, மதிப்பீடு செய்வது கடினம். நான் பெரும்பாலான வர்ணனை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் கேட்டிருக்கிறேன். வர்ணனை கேட்பது விளையாட்டை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. வர்ணனை செய்பவர்களில் பலரும் முன்னாள் வீரர்கள் ஆவர். நான் ஒரு சீசனில் 17 ஆட்டங்களில் மட்டுமே விளையாடுகிறேன். ஆனால், வர்ணனையாளர்கள் பல நாடுகளில் நூற்றுக் கணக்கான போட்டிகளை கண்டு அணிகள் குறித்த மகத்தான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்.

வீரர்கள் தங்கள் அணியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிவார்கள். ஆனால், வர்ணனையைக் கேட்பதன் மூலம் வெளிப்புற நபர்களின் கண்ணோட்டம் கிடைக்கிறது. புதிய திட்டங்களை தூண்டுகிறது. நாம் ஏன் இந்த அணுகுமுறையை முயற்சிக்கக்கூடாது என்ற எண்ணத்தை தூண்டும்.

நான் தாய்மொழி வர்ணனைகளை அதிகம் கேட்டதில்லை. ஆனால், போஜ்புரி மொழியின் வர்ணனையைக் கேட்க துடிப்பாக இருக்கிறது. பள்ளி பருவத்தில் வானொலி வர்ணனை கேட்பதை நினைவூட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தற்போது ரசிகர்கள் தங்களின் தாய்மொழியில் வர்ணனையைக் கேட்டு விளையாட்டை ரசிக்க விரும்புகிறார்கள். ஹரியான்வி மொழியில் வர்ணனையை கேட்க நான் விரும்புகிறேன். அது மிகவும் தனித்துவமானது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!

இந்த சீசன் ஐபிஎல் போட்டிகள் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, ஹரியான்வி, பெங்காலி, போஜ்புரி மற்றும் பஞ்சாபி ஆகிய 12 மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

அனைத்து மொழிகளிலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் வர்ணனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸின் அதிரடியை கட்டுப்படுத்துவோம்: தில்லி கேபிடல்ஸ் இளம் வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் அதிரடியை கட்டுப்படுத்துவோம் என தில்லி கேபிடல்ஸின் இளம் வீரர் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 8 போட்டி... மேலும் பார்க்க

சாய் சுதர்ஷன் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மும்பை இ... மேலும் பார்க்க

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றை... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; முதல் வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

அதிரடியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸில் வீரர்கள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப... மேலும் பார்க்க

அணியில் இணைந்த ஹார்திக் பாண்டியா; முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத ஹார்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார்.18-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்த... மேலும் பார்க்க