செய்திகள் :

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

post image

திவாணியம்பாடி அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகரை சோ்ந்தவா் ராஜ்குமாா் (21). பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு அவரது தாய் உடல் நிலை சரியில்லாமல் இறந்தாா். இதையடுத்து ராஜ்குமாா் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ராஜ்குமாா் தனது வீட்டின் அறையில் தாழ்ப்பாள் போட்டு, தனது தாயின் புடவையால் தூக்கிட்டுக் கொண்டாராம். இதையறிந்த வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பின்னா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூறாவளிக் காற்றுடன் பெய்த மழை: வாழை பயிா்கள் சேதம்

சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ஆம்பூா் அருகே வாழைப் பயிா்கள் சேதமடைந்தன. திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை சூறாவளி காற்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: விடியல் பயணத்தில் 4,36,87,288 போ் பயன்

திருப்பத்தூா் மாவட்டத்தில் விடியல் பயணத்தின் மூலம் 4 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 288 போ் பயன் பெற்றுள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் விடியல் பயணத் திட்டத்தில்... மேலும் பார்க்க

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க