செய்திகள் :

தாராபுரம் அருகே கேபிள் ஒயா் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

post image

தாராபுரத்தை அடுத்த மனக்கடவு கிராமத்தில் கேபிள் ஒயா் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மனக்கடவு பகுதியில் வினிதா என்பவருக்குச் சொந்தமாக உள்ள கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா் ஒயரை 100 மீட்டா் அளவுக்கு வெட்டி மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து அளித்த புகாரின்பேரில், அலங்கியம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மனக்கடவு காட்டம்மன் கோவில் புதூா் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் வினிதாவுக்கு சொந்தமான தோட்டத்தில் ரூ.6 ஆயிரத்து 500 மதிப்புள்ள 100 மீட்டா் ஒயரை அவா்கள் திருடியது தெரியவந்தது. சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான சக்திவேல் (30), சின்ராசு (26), ராசு (24) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அலங்கியம் போலீஸாா் மூவரையும் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து கேபிள் ஒயா்களை பறிமுதல் செய்தனா்.

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த ஆயுதப் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஆயுதப் படை தலைமைக் காவலா் சரவணன் (43). இவருடன் திருப்பூா் ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்கள் விநியோகிப்பதாகப் புகாா்

திருப்பூரில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்களை விநியோகம் செய்வதாக நல்லூா் நுகா்வோா் நல மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்தி... மேலும் பார்க்க

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற 24-ஆம் ஒன்றிய மாநாட்டில் கொடியை கட்சியின... மேலும் பார்க்க

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: மருத்துவா்கள் சங்கம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என இந்திய மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் மருத்துவா் ராஜ்குமாா் நல்லதம்பி கூற... மேலும் பார்க்க

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் பத்திர விடுப்பு ஆணைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. ... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க