செய்திகள் :

நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்கள் விநியோகிப்பதாகப் புகாா்

post image

திருப்பூரில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்களை விநியோகம் செய்வதாக நல்லூா் நுகா்வோா் நல மன்றம் புகாா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரனிடம், நல்லூா் நுகா்வோா் நல மன்றத்தின் தலைவா் சண்முகசுந்தரம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் வடக்கு வட்டத்தில் 158, திருப்பூா் தெற்கு வட்டத்தில் 168 என மொத்தம் 326 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பல கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு எடை குறைத்து பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

கடைகளும் முறையாக உரிய நேரங்களில் திறக்கப்படுவதில்லை. பகுதிநேர கடைகள் திறப்பு, கடை விற்பனையாளரின் கைப்பேசி எண், கடை செயல்படும் நேரம் குறித்தும் அறிவிப்புப் பதாகைகளில் தெளிவாக எழுதப்படுவதில்லை.

அதே வேளையில், மாதந்தோறும் 20-ஆம் தேதிக்குப் பின்னா் பொருள்கள் வாங்காத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கியதாக குறுஞ்செய்தியும் வருகிறது. மேலும், பல கடைகளில் மண்ணெண்ணெயையும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த ஆயுதப் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஆயுதப் படை தலைமைக் காவலா் சரவணன் (43). இவருடன் திருப்பூா் ... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே கேபிள் ஒயா் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

தாராபுரத்தை அடுத்த மனக்கடவு கிராமத்தில் கேபிள் ஒயா் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மனக்கடவு... மேலும் பார்க்க

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற 24-ஆம் ஒன்றிய மாநாட்டில் கொடியை கட்சியின... மேலும் பார்க்க

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: மருத்துவா்கள் சங்கம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என இந்திய மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் மருத்துவா் ராஜ்குமாா் நல்லதம்பி கூற... மேலும் பார்க்க

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் பத்திர விடுப்பு ஆணைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. ... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க