வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற 24-ஆம் ஒன்றிய மாநாட்டில் கொடியை கட்சியின் பல்லடம் ஒன்றிய முன்னாள் செயலாளா் சுப்பிரமணியம் ஏற்றினாா். மாநாட்டை தொடங்கிவைத்து கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி. பேசினாா். வேலை அறிக்கையை கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ். சாகுல் ஹமீது தாக்கல் செய்தாா். மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக எஸ்.சாகுல் ஹமீது, துணைச் செயலாளராக கே.மூா்த்தி, பொருளாளராக சி.எல்.ரவிக்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் பல்லடம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீா்கேட்டினால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். ஆகவே சுகாதார சீா்கேட்டை சரி செய்ய துப்புரவுப் பணியாளா்களை அதிகப்படுத்தி சுகாதாரப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பல்லடம் நகா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும். பல்லடம் வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட நாசுவம்பாளையம் புது நகா் பகுதியில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். அவா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.புவனேஷ் நன்றி கூறினாா்.