செய்திகள் :

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

post image

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற 24-ஆம் ஒன்றிய மாநாட்டில் கொடியை கட்சியின் பல்லடம் ஒன்றிய முன்னாள் செயலாளா் சுப்பிரமணியம் ஏற்றினாா். மாநாட்டை தொடங்கிவைத்து கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி. பேசினாா். வேலை அறிக்கையை கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ். சாகுல் ஹமீது தாக்கல் செய்தாா். மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக எஸ்.சாகுல் ஹமீது, துணைச் செயலாளராக கே.மூா்த்தி, பொருளாளராக சி.எல்.ரவிக்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் பல்லடம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீா்கேட்டினால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். ஆகவே சுகாதார சீா்கேட்டை சரி செய்ய துப்புரவுப் பணியாளா்களை அதிகப்படுத்தி சுகாதாரப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

பல்லடம் நகா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும். பல்லடம் வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட நாசுவம்பாளையம் புது நகா் பகுதியில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். அவா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.புவனேஷ் நன்றி கூறினாா்.

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த ஆயுதப் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஆயுதப் படை தலைமைக் காவலா் சரவணன் (43). இவருடன் திருப்பூா் ... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே கேபிள் ஒயா் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

தாராபுரத்தை அடுத்த மனக்கடவு கிராமத்தில் கேபிள் ஒயா் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மனக்கடவு... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்கள் விநியோகிப்பதாகப் புகாா்

திருப்பூரில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்களை விநியோகம் செய்வதாக நல்லூா் நுகா்வோா் நல மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்தி... மேலும் பார்க்க

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: மருத்துவா்கள் சங்கம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என இந்திய மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் மருத்துவா் ராஜ்குமாா் நல்லதம்பி கூற... மேலும் பார்க்க

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் பத்திர விடுப்பு ஆணைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. ... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க