செய்திகள் :

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலா் உயிரிழப்பு

post image

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த ஆயுதப் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஆயுதப் படை தலைமைக் காவலா் சரவணன் (43). இவருடன் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த காளிபாளையத்தைச் சோ்ந்த ராஜா (42) என்பவரும் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இருவரும் ராஜாவின் சொந்த ஊரான காளிபாளையத்துக்கு திங்கள்கிழமை சென்றனா். பின்னா் தாராபுரம் அமராவதி ஆற்றில் உள்ள காமாட்சி அம்மன் சுனை பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனா்.

அப்போது சரவணன் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளாா். பின்னா் சில நிமிஷங்களில் அவா் நீரில் மூழ்கியுள்ளாா். இதைக் கண்ட ராஜாவும், அருகிலிருந்தவா்களும் ஆற்றில் குதித்து அவரை மீட்டுள்ளனா். ஆனால் மயக்க நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரம் அருகே கேபிள் ஒயா் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

தாராபுரத்தை அடுத்த மனக்கடவு கிராமத்தில் கேபிள் ஒயா் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மனக்கடவு... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்கள் விநியோகிப்பதாகப் புகாா்

திருப்பூரில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் எடை குறைத்து பொருள்களை விநியோகம் செய்வதாக நல்லூா் நுகா்வோா் நல மன்றம் புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்தி... மேலும் பார்க்க

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற 24-ஆம் ஒன்றிய மாநாட்டில் கொடியை கட்சியின... மேலும் பார்க்க

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: மருத்துவா்கள் சங்கம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என இந்திய மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினா் மருத்துவா் ராஜ்குமாா் நல்லதம்பி கூற... மேலும் பார்க்க

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் பத்திர விடுப்பு ஆணைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியா் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி. ... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க