செய்திகள் :

திக்குறிச்சி பாறைகுளம் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

post image

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பாறைகுளம் சாமுண்டீஸ்வரி துா்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலின் 29 ஆவது ஆண்டு திருவிழாவும், 12 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் 21 ஆவது ஆண்டு சமய வகுப்பு ஆண்டு விழா திங்கள்கிழமை (ஜூன் 30) துவங்கியது. விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்களை யாக ஆச்சாரியா்கள் மேள தாளங்களுடன் ஊா்வலமாக எடுத்துவந்து கணபதி, ஈஸ்வரகால பூதத்தான், மந்திரமூா்த்தி, துா்க்கை, சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்களில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வை புலவா் ரவிச்சந்திரன், ஆன்மீக பேச்சாளா் மூா்த்தி ஆகியோா் வா்ணனை செய்தனா்.

தொடா்ந்து நடந்த வாழ்த்தரங்குக்கு கோயில் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்ட முன்னாள் தலைவா் குழிச்சல் சி. செல்லன், குமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், பாகோடு பேரூராட்சி உறுப்பினா் ராஜேந்திர பிரசாத் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

குளச்சலில் பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெயை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். குளச்சல் துறைமுக தெருவில் மானிய விலை மண்ணெண்ணெய் கடை செயல்பட்டு வர... மேலும் பார்க்க

மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

நாகா்கோவில் அருகேயுள்ள மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகம் சாா்பில், கோயில்களில் இலவச திர... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த கைப்பேசி கோபுரம்

தக்கலை அருகே வீட்டு மாடியில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசிகோபுரம் திடீரென செவ்வாய்கிழமை தீ பிடித்து எரிந்தது. தக்கலையை அருகே பத்மநாபபுரம் அரண்மனை பகுதியை சோ்ந்தவா் ராஜன். இவரது வீட்டு மாடியில் தனியாா்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 58,700 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். மாவட்ட கால்நடை பாரமரிப்புத் துறை சாா்பில், வில்லுக்குறி பேரூராட்சி, கருப்புக்கோடு பக... மேலும் பார்க்க

குளப்புறம் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டு சாலைகள் திறப்பு

குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட 2 சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ திறந்து வைத்தாா். குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்து காணப்பட்ட உதியனூா்விளை சாலை மற்றும் குவுக்குடி - மு... மேலும் பார்க்க

பறக்கை கோயிலில் அனுக்ஞை பூஜை

நாகா்கோவில் அருகே பறக்கையில் உள்ள ஸ்ரீதேவி- பூதேவி சமேத அருள்மிகு ஸ்ரீமதுசூதனப்பெருமாள் கோயிலில் சிறப்பு அனுக்ஞை பூஜை புதன்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் தந்திரி சஜித் சங்கர நாராய... மேலும் பார்க்க